த்ரிஷா சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் அவருக்கென்று பட வாய்ப்புகள் வரத்தான் செய்கின்ரன. குறிப்பாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் இன்றும் முன்னணி நடிகையாக.
அரவிந்த் சாமியுடன் சதுரங்கவேட்டை-2, மோகினி, கர்ஜனை, விஜய் சேதுபதியுடன் 96, தமிழ் தெலுங்கில் உருவாகும் 1818 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். மேலும் ஹோ ஜூட் என்ற மலையாளப் படமும் கைவசம் உள்ளது. இப்போது திருஞானம் இயக்கத்தில் `பரமபதம் விளையாட்டு' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை 24 எச்அர்எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆற்காடு கோட்டை இப்படத்தின் படப்பிடிப்பு ஆற்காடு கோட்டையில் நடைபெறுகிறது. இந்த கோட்டை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் ஔரங்கசீப் ஆளுகையில் இருந்தது. அதன் பின்னர் ஆற்காடு நவாப் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.
முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு அம்ரிஷ் இசையமைக்கிறார்.
அரவிந்த் சாமியுடன் சதுரங்கவேட்டை-2, மோகினி, கர்ஜனை, விஜய் சேதுபதியுடன் 96, தமிழ் தெலுங்கில் உருவாகும் 1818 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். மேலும் ஹோ ஜூட் என்ற மலையாளப் படமும் கைவசம் உள்ளது. இப்போது திருஞானம் இயக்கத்தில் `பரமபதம் விளையாட்டு' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை 24 எச்அர்எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆற்காடு கோட்டை இப்படத்தின் படப்பிடிப்பு ஆற்காடு கோட்டையில் நடைபெறுகிறது. இந்த கோட்டை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் ஔரங்கசீப் ஆளுகையில் இருந்தது. அதன் பின்னர் ஆற்காடு நவாப் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.
முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு அம்ரிஷ் இசையமைக்கிறார்.