LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

New Member••• 1
Film Motion

Film Motion
Film Motion

Film Motion


29/11/2017, 12:44 am

அழ வைத்த புகைப்படக் கலைஞர்கள்: அதிரடி முடிவு எடுத்த ஐஸ்வர்யா ராய் 27-1511789099-1

மும்பை: புகைப்படக் கலைஞர்கள் தன்னை அழ வைத்ததை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு முடிவு எடுத்துள்ளார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். உதடு பிளவுடன் இருந்த 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தார், அந்த குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டினார் ஐஸ்வர்யா ராய்.

ஆராத்யா ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவையும் அழைத்து வந்திருந்தார். அப்போது புகைப்படக் கலைஞர்கள் ஆராத்யாவை புகைப்படம் எடுக்க போட்டி போட்டனர். கலைஞர்கள் கத்தாதீங்க, குழந்தைகள் பயப்படுகிறார்கள். புகைப்படம் எடுத்தது போதும் என்று ஐஸ்வர்யா ராய் கூறியும் புகைப்படக் கலைஞர்கள் கேட்கவில்லை. இதையடுத்து ஐஸ்வர்யா ராய் அழுதுவிட்டார். தான் பிரபலமாக இருப்பதால் ஆராத்யா கஷ்டப்படக் கூடாது என்று முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இதையடுத்து ஆராத்யாவை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை நிறுத்த முடிவு செய்துள்ளார் அவர்.

சிறுமி ஆராத்யா ஏற்கனவே கேமராவுக்கு முன்பு அதிகம் தோன்றிவிட்டார். நடந்தது நடந்துவிட்டது இனி ஆராத்யாவை வெளி உலகின் கண்களில் காட்டக் கூடாது என்று தீர்மானித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் பார்ட்டிகள் முதல் விருது வழங்கும் விழாக்கள் வரை எங்கு சென்றாலும் ஆராத்யாவை அழைத்துச் சென்றார். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு கூட ஆராத்யாவை அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அழ வைத்த புகைப்படக் கலைஞர்கள்: அதிரடி முடிவு எடுத்த ஐஸ்வர்யா ராய்

On: 'FILMS OF INDIA'

You cannot reply to topics in this forum